Wednesday, September 23, 2009

எனது கிராமம், எனது ஆசைகள்...

எங்கள் ஊரின் கச்சேரி,
அது எப்போதும் நாளுபட்டே கிடக்கும்.

கிராம பஞ்சாயத்து தேர்தல் வந்தது ,
தலைமை ஆசிரியர் ஓய்வு இவர் சுயேட்சை ,
மணல் ஏஜென்ட் இவர் எதிர்க்கட்சி,
அப்பிராணி மணல் ஏஜென்ட் தம்பி இவர் ஆளும்கட்சியின் கையாள்.
போட்டி ஆரம்பம் ஆயிற்று. . .

சிலர் தலைவரின் அன்பு கட்டளைக்காக
பொட்டலத்து சோற்றை தின்று கம்பம் நாட்டி வீட்டை மறந்தனர்,

சிலர் தான் செய்யும் திருட்டை மறைக்க கப்பம் கட்டினர்,

சிலர் சரக்கில் நனைந்து, விலைமாந்தர்கள் ஆனார்கள்,
சிலர் கோயில் கட்ட நிதி திரட்டி கடவுளையும் சாட்சி ஆக்கினர்,
இன்னும் சிலர் மாறாத ஓட்டினால் செல்லாத காசானார்கள்,

இன்னும் சிலர் விடுமுறைக்கு திட்டம் இட்டனர்,

இன்னும் கொஞ்சம் பேர் மீதம் இருந்தனர்,
மாற்றம் விரும்பும் அவர்கள் மைனாரிட்டியால் தோற்று போனார்கள் ...

முடிவில் கையாள் செங்கோல் ஏந்தினார்...

அண்ணா அன்றே சொன்னார் மக்கள் எவ்வழியோ அரசும் அவ்வழியே என்று.
எப்போதும் அடிமை வாழ்வே நிம்மதி என்கிற ஊரில்
நேர்மையும் நீதியும் கொஞ்சம் சாய்ந்துதான் கிடக்கும்.

கணக்குகளில் மட்டும் வேலைகள் நடந்தன,
ஏரி, வாய்க்கால்கள் தூர் வாரப்பட்டன.
குடிநீருக்கு அடி குழாய்கள் அமைக்கப்பட்டன,
கான்கிரீட் பாதை, விளையாட்டு மைதானம், சுடுகாடு சுற்றுசுவர், என மொத்தம் 90 லட்சம் செலவு.

இதில் உண்மையாக உள்ளது பாதையும், விளையாட்டு மைதானமும் .
அதிலும் உண்மை பள்ளை இளித்தது.

சுமாராக ஒரு 50 லட்சம் பணம்
கருப்பு ஆயிற்று.

மழை வந்ததில் வாய்கால்கள் வழிவிடவில்லை,
ஏரி நிறையவில்லை,
அவைகளுக்கு என்ன தெரியும், பாவம் மக்கள்.

இதற்கு மைனாரிட்டி மக்கள் சோர்ந்துபோய்விடவில்லை ,
அவர்கள் ஒன்றாக சேர்ந்து ஊருக்கு தேவையான நல்ல காரியங்களை அவர்களாகவே செய்தனர்,
பிரதிபலனை எதிர்பார்கவில்லை,

தூர் எடுத்தனர், மரம் நட்டனர், குப்பைகளை ஒழுங்கு பன்னினர்.
துணிப்பையை கொடுத்து பிளாஸ்டிக் வேண்டாம் என்றனர்.
பிளாஸ்டிக் எரித்தால் கேடு என்றனர்.
இயற்கை வழி நம்வழி என்றனர்.

முதலில் கேலி செய்தவர்கள், பின்னர் அவர்களுடன் சேர்ந்துகொண்டனர்,
மக்கள் உண்மையை உணர்ந்தனர்.
நாமே நம்மை ஆள்வதன் சுகத்தை கண்டனர்,
மைனாரிட்டி, மெஜாரிட்டி ஆனார்கள்.
இயற்கை வழியே எங்கள் வழி, வேண்டாம் இந்த செயற்கை நாகரிகம்.

இப்போது,

நின்று செல்லும் பேருந்து, தளும்பி நிற்கும் எங்கள் ஏரி,
அன்னை பூமி மாதாவின் அன்பினில்,
அசுர பலம் கொண்ட எங்கள் அப்பன் கதிரவனின் காலடியில்,
வாழும் மானிடப் பெருங்கூட்டம் எங்களுடையது.

இயற்கையே எங்கள் மதம்,
உண்மையே எங்கள் வழி,
அன்பே எங்கள் மொழி,
அறிவே எங்கள் பலம்,
அதன் தேடலே எங்கள் பயணம்,
மகிழ்ச்சியே எங்கள் சுவாசம்,
உழைப்பே எங்கள் அடையாளம்.
இதுவே எங்கள் நெறி.

3 comments:

"உழவன்" "Uzhavan" said...

நோக்கம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
 
அன்புடன்
உழவன்

அப்பாவி உழவன் said...

உழவன் அவர்களுக்கு என் நன்றிகள்.

Murugesh said...

hi,
thanks for posting my photo in your blog.
btw, where are you from? whats your name.
Can you mail me to appumail@gmail.com

-Murugesh

Post a Comment