Thursday, September 24, 2009

கிராமத்தின் தேவைகள் . . .1

இப்போது விவசாயிகளின் தேவைகள் என்ன என சிந்தித்து பாப்போம்,
  1. விவசாயிகளிடம் தற்போதுள்ள நிலங்களை அபகரிக்க ஒருபோதும் அரசு எண்ணக்கூடாது.
  2. விவசாய வேலைகள் எளிமயக்கப் படவேண்டும்.
  3. மானியங்கள் நேரடியாக விவசாயிகளுக்கே கொடுக்கப்படவேண்டும்.
  4. விவசாய உற்பத்தியாளர்களே நேரடியாக விற்க வழி காண வேண்டும்.
  5. இவை எல்லாவற்றிற்கும் தீர்வு உண்டு எனில் அது, உண்மையான கூட்டுறவு.
இது ஏற்கனவே உள்ளதுதானே என நீங்கள் எண்ணலாம்?

இப்போது உள்ளது கூட்டுறவே அல்ல !, அது கொள்ளை உறவு. மக்கள் பணத்தை கொள்ளையிட கட்சிகள் மக்களுடன் செய்யும் உறவு.

ஆடு, பால் பண்ணை, விவசாயம் செய்ய என எதாவது ஒன்றிற்கு கடன் கேட்டு கூட்டுறவு சங்கத்திற்கு சென்று பாருங்கள் உண்மை புரியும். செய்திகளில் அரசு தருவதாக சொல்லும் விவசாய மானியங்கள் ( மேலே சொன்னவற்றிற்குதான்) பல ஆயிரம் கோடி ரூபாய்கள்
எங்கே யாருக்கு சென்றது என ஒரு நேரடி சர்வே எடுத்தால் பல உண்மைகள் வெளிவரும். ஒரு சோறு : இருபதாயிரம் கடனில் பத்தாயிரம் மானியம். ஏட்டளவில் இருக்கும் நபர் பெற்றது சுமார் மூன்றாயிரம் மானியம் மட்டும் ( சும்மா கையெழுத்து போட்ட கிடைக்குதில்ல சும்மாவா). மீதி கூட்டு கொள்ளை. பேங்க், கூட்டுறவு, இன்னும் திறமையுள்ள பிற துறைகள் மற்றும் புரோக்கர்கள் .
கற்பனை விவசாயியின் பெயரில் யார் யார் கொள்ளை அடிக்கிறார்கள் என பாருங்கள். இந்த கூட்டுறவு எப்படி மக்களை முன்னேற்றும்?

எங்குமே கூட்டுறவு ஜெயிக்கவில்லையா? ஏன் இல்லை! அமுல் ஒரு சிறந்த முன்மாதிரி, இஸ்ரேல் நாடு மிகச் சிறந்த முன்மாதிரி. எப்போது கிடைக்கும் அந்த நேர்மையும், உழைப்பும் நம் கூட்டுறவு சங்கங்களிடம்?

உலகின் உண்மை ஒன்றே. வலியவன் பிழைப்பான்.
survival of the fittest.
அய்யோ! விவசாயம் சீரழிகிறதே, கிராமங்கள் பாழாகிறதே என கூச்சல் போடுவதால் விவசாயிகளுக்கும், கிராமங்களுக்கும் எந்த நன்மையும் வந்துவிடாது.
என்ன செய்ய வேண்டும்? என்ன செய்ய கூடாது? என்பதில் நாம் ( விவசாயிகள் ) மிகவும் அக்கறையுடன் கவனம் செலுத்த வேண்டும்.
  • விவசாயிகள் ஒன்றிணையவேண்டும், நாம் ஒவ்வொரு கிராமங்களிலும் பங்காளி சண்டையாலும், கட்சியாலும், ஜாதியாலும், மதத்தாலும் நமக்குள் ஒற்றுமையின்றி இருக்கிறோம். இதுவே நம் வீழ்ச்சிக்கு காரணம். பிற மதத்தினரை மதிக்கும் உயர் ஜாதி இந்துக்கள் தன் மதத்தில் தாழ்ந்தவர் என இவர்களே கட்டம் கட்டி மிதிக்கின்றனர். உரில் உள்ள கோவில்களில் அனுமதிப்பதில்லை, தனி டம்ளர் முறை இன்னும் உள்ளது. இவைகள் உடனடியாக களையப்பட வேண்டும். ஊரில் அனைவரும் ஒன்றுபட்டு இருந்தால்தான் நாம் அனைவரும் வளர முடியும். தவறுகளும் பிரச்சினைகளும் இல்லாமல் இரண்டு மனிதர்கள் ஒன்றாக வாழமுடியாது, எனில் கிராமங்கள் மட்டும் என்ன விதிவிலக்கு. ஆனால் அதை எப்படி எதிர் கொள்கிறோம் என்பதில் பல முரண்பாடுகள்.
    1. ஒவ்வொரு ஊரிலும் வாரம் ஒரு விவாதம் நடத்தப்பட வேண்டும். இதில் அனைத்து விவசாய மக்களும் கலந்து கொள்ள வேண்டும்.(மேலும் வளரும்)

No comments:

Post a Comment